Sunday, December 16, 2012

காதல் சிறை

கப்பலில் வாடி,
கடலில் தேடினேன்,
காதல் கன்னியை..!

திக்கு தெரியாமல்,
பித்தென ஆனேன்,
அவளைக் காணாமல்..!

தூரத்தில் விடிவெள்ளி,
மின்னியது அவளொளி,
பின்தொடர்ந்தேன் அவளை..!

கரையைச் சேர
வழியில்லை- சிறையில் 
எந்தன் தேவதை..!

மாயனவன் பிடியினை 
நீக்க மன்னன் -
நான் வருகிறேன்..!  

சிறை மீட்கும் 
நேரம்வரை - காத்திரு
சின்ன பெண்ணே..!


Friday, November 23, 2012

காதல் சுவை

கடல் நீரில் பிறந்த   
உப்பு - உவர்க்கும் கல்வி பாடத்தில்,
உன் வியர்வையில் பூத்த 
உப்போ - இனிக்கிறது நம் காதல் பாடத்தில்..! 

தூரம்

நம் இருவருக்கும் இடையில்
பல்லாயிரம் மையில்கள் - கொடிதன்று,
பேசாமல் அமைதியாய் கழியும் 
கன நொடி நேரம்  -
கொடிதினும் கொடிது..!!! 

Sunday, October 21, 2012

தவம்

நீ இன்றி இரவெல்லாம் கண்விழித்தேன்,
விடியலாய் நீ வருவாய் என,
விடிந்தும் ஏன் நீ வரவில்லை,
விழியின் தவம் போதவில்லை என்றோ!!??

தவிப்பு

தகிக்கிறது உள்ளம் - உன்னை
நீங்கி விலகி நிற்பதால்,
தலைகோத வருவாயா - இல்லை
தலை சாய்ந்ததும் வருவாயா..!!?

Friday, October 5, 2012

பசலை

என்  கோப(வை) கிளியே,
உந்தன் உடல் உருக -
காரணம் மேகம் இல்லை!!

காதலன் தனை பிரியும்,

தலைவிக்கு வரும் இது-
கொடிய நோய் பசலையாம்
!!!

Monday, October 1, 2012

வரம்

வருடம் ஒரு முறை பூஜை,
வாரம் ஒரு முறை விரதம் - இருந்தாய்
வரனாய் நான் வர வேண்டி..!

தமிழில் எண்கள் இல்லை- நான்
தவம் செய்த காலம் உரைக்க - 
வரமாய் தேவதை - நீ வர வேண்டி..! 

Monday, September 3, 2012

தேவதை

தேவதையே ...!
நீ யார் என்று -
இயற்கை கூட அறியும்...!

பன்னீர் தெளிக்கும் வானம்,
குடை பிடிக்கும் மேகம்,
வரவேற்புத்   தோரணம் வானவில்..!

பாதம் முத்தமிடும் ரோஜா,
பார்த்து  கவிழும் தாமரை,
கன்னம் கடிக்கிறது தேனீ...!!

Sunday, August 19, 2012

ஏமாற்றம்

அவனியை அல்லல்படுத்தி ஆழ்பவன் -
இல்லத்தின் இன்பத்தைப் பருகுபவன் -
உறவுகளைக் கெடுக்கும் உத்தமன் -
எதிர்பார்ப்பின் செல்லக் குழந்தை -
ஏமாற்றம்..!!

Saturday, August 18, 2012

கண்ணாமூச்சி

கண் முன்னே வந்து,
கைத் தொடும் தூரத்தில் நின்று,
கன நொடியில் மறைந்து,
ஆடுகிறாய் - கண்ணாமூச்சி..!!!

Sunday, July 15, 2012

காதல் கனவு

கண்   உறங்கும்  வேளையிலே  காதலியே நீ  தானே,
பின் இரவின் பாதியிலே பஞ்சணையில்  நீ  தானே,
இன்பம் தரும் கனவுகளின் நாயகியும்  நீ  தானே,
கண் விழித்துப் பார்கையிலே கரைவதும் நீ  தானே..!!


Monday, June 4, 2012

பாலைத் திணை

காயும் சூரியன் - கடுங்குளிர்,
சுட்டெரிக்கும் மணல் - உறைபனி,
பூக்கும் கற்றாழை - உறங்கும் நத்தை,
கரையும் பேடை - கூகைக் காற்று,
அங்கே நீ - எங்கோ நான்,
நம் பிரிவால் -
இயற்கைக்கும்  சோகம்..!

தூரத்தில் மேகம் -
விரைந்தோடி வாரும்,
என்னவளைக் கண்டு -
என் தூது சேரும்..!
காற்றை வருவேன் -
காதலை தருவேன்,
உன்னைச் சேரும் நாளை 
உரக்கச் சொல்வேன்...!  

Sunday, April 22, 2012

மரணம்

நான்கே நாட்களில் - நீ
முற்றிலும் மறந்தாய் - என்
ஏட்டில் எழுதியது - இதோ
சரியாக நடந்தது - இங்கு
நொடியில் மரணம்...!

Saturday, April 14, 2012

மரியாதை

என்னைச் சுட்டி
"அவர் - என்னவர்"
என சொல்வதைக் கேட்பவர்க்குத்
தெரியாது - என் சுட்டிப்பெண்
நீ - எனக்கு தரும் மரியாதை...!

Sunday, April 8, 2012

தண்டனை

குற்றம் புரிந்தவனுக்கு
விசாரித்த பின் - தண்டனை...!
உன்னை விட்டுச் சென்ற
எனக்கு - வேண்டாம் விசாரணை -
உன் மௌனமே தண்டனை....!

Saturday, March 24, 2012

பார்வை

மையல் தரும் உனது
சுட்டும் விழிப் பார்வையை 
ருசிக்க -
கோதையே - எப்போதும் வரும்
வைகறை என காத்திருக்கிறேன்....!

Saturday, March 17, 2012

ஆனந்த அவஸ்தை..!

சொல்வதைக் கேட்பவன் நான்,
அதற்காக - நான்
நினைத்ததையும் நீயே சொல்கிறேன்
என சண்டை இடும் - நீ...!

Sunday, February 19, 2012

சிலேடை 2 : தாமரை

தாமரையே உந்தன்
கண் பார்வைப் பட்டால் -
மயங்குவான் மரை(றை) நாயகன்....!

Monday, February 13, 2012

காதலர் தினம்

 பிப்ரவரி 14 -
காதலர் தினம் -
நான் கொண்டாடுவதில்லை...!

என் காதல் தேவதையே -
இந்த ஜென்மமே நமக்கு
காதலர் தினம் தான் - 
கன நேரமும் மாறாது
நாம் நேசிப்பதால்....!

Thursday, February 2, 2012

விடுகதை

மானிட வாழ்வின் ஆதாரம்,
இருக்கும் இடம் அறிந்து -
உன்னை நீ வடிவமைப்பாய்..!
உந்தன் தன்மை வேண்டும் எங்களுக்கு...!

விளியின் காதல் குழந்தை - நீ..!
உன்னால் தேசங்கள் பிளவுபட்டது...!
உந்தன் மகனோ - தேசங்கள்
தாண்டி காதல் கொள்கிறான்..!

பதில் தாருங்கள் இக்கேள்விகளுக்கு -
தாய் தந்தை யார்...?
காதல் குழந்தையின் பெயர் என்ன?
அவனின் மகன் யார்?
மகனின் காதலி யார்?  

Wednesday, February 1, 2012

எங்கும் நீயே...!

பசியுடன் நான் ஊட்டியில் -
எப்போது ஊட்டி விடுவாய்...?

பந்திப்பூர் சாலையில் நீ -
மானாய் வந்தாய் - நான் 
உருண்டு ஓடினேன் பந்தாய்...!

மடிகேரி சென்றாலும் உன்
மடியின் சுகம் கிட்டவில்லை...!

மைசூரு அரண்மனையில் தேடினேன் 
என் ராணியே உன்னை -
பதில் வந்தது எனக்கு -
மன அரண்மனையில் உள்ளாளென...!

உன்னை எண்ணியே நாட்கள் 
நான்கு ஓடியது - நாம்  
எப்போது ஒன்று கூடுவது..?

Monday, January 16, 2012

காணும் பொங்கல்

இன்றோ அனைவருக்கும் 
காணும் பொங்கல்,
சுந்தரியே -
உன்னைக் காணும் நாள் தான்
எந்தன் உள்ளம் பொங்கும்..! 

Saturday, January 7, 2012

நண்பன்

வாழும் வரை உன்னோடு இருப்பேன் -
என்றுரைக்க இது காதல் இல்லை,
இருக்கும் வரை ஒவ்வொரு அணுவிலும் -
இறந்த பின் நினைவுகளோடும் இருப்பாய் -
நீ என் நண்பனாய்...!

Wednesday, January 4, 2012

செய்கை மொழி

சின்னச் சின்னக் கைகளில்
செய்கையால் பேசுகிறாய் -
உந்தன் அழகைப் பார்த்து - 
ஊமை ஆன என்னிடம்....!


Monday, January 2, 2012

காதல் சடுகுடு

நானும் விளையாடுகிறேன்..!
என்னுள் வந்த உந்தன் சுவாசம்
வெளியே செல்ல விடாமல் -
காதல் சடுகுடு...!