Thursday, February 6, 2014

பிரிவு

அவள் அங்கே 
நான் எங்கோ -  
கரம் பிடிக்கும் வரை - ஏற்றுக்கொண்டோம்!

இன்றும் அவள் அங்கே 
நான் எங்கோ -
தாங்கவில்லை மனது!

பிரிந்து இருப்பது 
வாழ்வன்று - பிரிந்தாலும் 
புரிந்து இருப்பதே  
வாழ்வு!

கடல் தாண்டி 
சென்ற தலைவன் 
ஆனந்த அலையில் 
மிதக்கவில்லை!!
கவலை கடலில் 
தவிக்கிறான்!

மது அருந்தினால் 
மன அழுத்தம்  நீங்கும் - 
எந்தன் மதுவே  நீ தானே,
என்று என் வேதனை நீங்கும்?