அவள் அங்கே
நான் எங்கோ -
கரம் பிடிக்கும் வரை - ஏற்றுக்கொண்டோம்!
இன்றும் அவள் அங்கே
நான் எங்கோ -
தாங்கவில்லை மனது!
பிரிந்து இருப்பது
வாழ்வன்று - பிரிந்தாலும்
புரிந்து இருப்பதே
வாழ்வு!
கடல் தாண்டி
சென்ற தலைவன்
ஆனந்த அலையில்
மிதக்கவில்லை!!
கவலை கடலில்
தவிக்கிறான்!
மது அருந்தினால்
மன அழுத்தம் நீங்கும் -
எந்தன் மதுவே நீ தானே,
என்று என் வேதனை நீங்கும்?