Monday, February 18, 2013

கோரிக்கை

தவம் செய்ய காலமில்லை -
   உன்னைப் பிரிய நேர்வதால்,

காகிதத்தில் எழுதி அனுப்பினேன் -
   ஆண்டவனிடம் ஒரு கோரிக்கை,

பின் வரும் பிறவியில் -
   தஞ்சையில் பிறக்க வேண்டி,

தலையாட்டி பொம்மையாய் நான் -
   நீ சொல்வதை கேட்க!!!!

Thursday, February 14, 2013

தவளை

இரட்டை  வாழ்கை வாழ்வதால் -
நானும் தவளை தான்!!

கண்ணீர்

மொழிகள் வெளிபடுத்தாத உணர்வை -
மனிதன் புரிந்து கொள்ள -
இறைவன் படைத்த ஒருவன் -
கண்ணீர்!!

வெறுமை

பல இன்னல்களைக்  கடந்து,
வேண்டிய அளவு வாடி,
இயன்ற வரை முயன்றும்,
நினைத்தது நிகழவில்லை - விளைவு 
"வெறுமை"

ஏக்கம்

உன்னோடு பேசினால்தான் என்
கவிதைக்கு உயிர் பிறக்கிறது!!!
அதற்காக பேசுவதோடு நிற்கிறாயே,
பாவம் என்னுயிர் வாடுகிறது!!!