Wednesday, February 1, 2012

எங்கும் நீயே...!

பசியுடன் நான் ஊட்டியில் -
எப்போது ஊட்டி விடுவாய்...?

பந்திப்பூர் சாலையில் நீ -
மானாய் வந்தாய் - நான் 
உருண்டு ஓடினேன் பந்தாய்...!

மடிகேரி சென்றாலும் உன்
மடியின் சுகம் கிட்டவில்லை...!

மைசூரு அரண்மனையில் தேடினேன் 
என் ராணியே உன்னை -
பதில் வந்தது எனக்கு -
மன அரண்மனையில் உள்ளாளென...!

உன்னை எண்ணியே நாட்கள் 
நான்கு ஓடியது - நாம்  
எப்போது ஒன்று கூடுவது..?

1 comment: