பசியுடன் நான் ஊட்டியில் -
எப்போது ஊட்டி விடுவாய்...?
பந்திப்பூர் சாலையில் நீ -
மானாய் வந்தாய் - நான்
உருண்டு ஓடினேன் பந்தாய்...!
மடிகேரி சென்றாலும் உன்
மடியின் சுகம் கிட்டவில்லை...!
மைசூரு அரண்மனையில் தேடினேன்
என் ராணியே உன்னை -
பதில் வந்தது எனக்கு -
மன அரண்மனையில் உள்ளாளென...!
உன்னை எண்ணியே நாட்கள்
நான்கு ஓடியது - நாம்
எப்போது ஒன்று கூடுவது..?
super :)
ReplyDelete