Thursday, October 27, 2011

அல்லியின் பிரிவு

அல்லி  காத்திருகிறது  நிலவொளிக்காக,
அல்லிக்கு  தெரியாது  இன்று  அமாவாசை  என்று  -
அல்லிக்கு  உண்டு  மோட்சம்  பதினைந்து நாட்களில்!
போர்க்களத்தில்  மணாளனை இழந்த  மங்கைக்கு?

- அனிதா 

நிழல் நிஜமாகிறது

என்  விழிகளுக்கு இத்தனை ஆற்றலா!!
சற்றும்  இமைக்காமல்  உன்  புகைப்படத்தை  உற்று  பார்த்தால்  -
அடடா..நிழல்கூட  இங்கே  நிஜமாகிறது!!

- அனிதா

மயிலின் மையல்

கனத்த கார்மேகம்
அடைமழை அறிகுறி,
சிலிர்க்கும் அதைக் கண்ட தோகை மயில் -
உன்னைக் கண்ட நான்...!

 - அனிதா

திருவிழா

என் உள்ளம்  என்னும் ஊரில்
இன்று கொண்டாட்டத் திருவிழா,
இருவருக்கு மட்டும் -
என்னவளின் பிறந்தநாள்...! 

~ என் அன்பு அ(னிதா)க்காவின் கவிதை :) :)

எதிர்பார்ப்பு

பல முறை பசியோடு காத்திருந்தேன் - வரவில்லை, 
வெயிலில் வெந்து மடிந்தேன் - 
அப்போதும் வரவில்லை,
பிறவிகள் பல எடுத்தாலும் -
மாறாது எந்தன் எதிர்பார்ப்பு - 
மழையை நோக்கும் நெர்ப்பயிறும் - 
உன்னை தேடும் நானும்! 

Wednesday, October 26, 2011

தீபாவளி

மண் வளம் போற்றிட - பூந்தொட்டி,
கடல் வளம் பெருக - சங்கு சக்கரம்,
ஊர்வன பறப்பன - குருவி வெடி பாம்பு மாத்திரை,
அறிவியல் வளர்ச்சிக்கு - ரயில் பெட்டி,
வின்வெளி ஆராய்ச்சிக்கு -  ஏவுகணை,
நாட்டுப்பற்று விதைத்திட - நேதாஜி வெடி,
இறை நம்பிக்கை உள்ளோர்க்கு - லக்ஷ்மி வெடி,
என நம் முன்னோர்கள் - 
மனிதகுலத்திற்கு தேவையான 
அனைத்தையும் போற்றினார்கள்...!

நாமோ இயற்கையை அழித்து,
விலங்குகளின் இருப்பிடத்தை ஆக்கிரமித்து,
காற்றை மாசுபடுத்தி, 
மொழி மதம் நாடு எல்லாம் மறந்து,
நமக்கு நாமே விரோதி ஆகின்றோம்...!

சற்றே யோசிப்போமாக..!
தீப ஒளி திருநாளில் -
நம் உள்ளம் ஒளி பெறட்டும்....!

Tuesday, October 25, 2011

ஊடல்

மின்னல்  வெளிச்சமாய்  கோரைப்பற்கள்,

இடி முழக்கமாய்  கண்களின்  தாக்குதல்,


சாரலாய் வரும் - முடிவு  பெறாத  வார்த்தைகள்,

பேய்  மழையாய்  நோகடிக்கும்  - முற்றுபெற்ற  சொற்கள்,

வெள்ளமாய்  பெறுகும்  கண்ணீர்  துளிகள்,


இவை  அனைத்தும்  தேவைதானா ??!


தனிமை  என்றுமே  இனிமை  தானா...!!


அறவே  இல்லை....!!!


அடை மழைக்கு  பின்  துளிர்த்தெழும்  -


செழிப்பான தளிர்  தான்  - ஊடலின் பின் வரும் காதல் :)



விவாகம்

சினம்  கொள்ளும்  வேங்கை  - பூனையாய் மாறியது ,

யார்  சொல்லியும்  கேளாதவன்  - மெல்லிய  பூவின்  ரசிகன்  ஆனான் ,


புலால் உண்பவன்  - புல்லினங்களின் கூடலைக் கற்றுக்கொண்டான் ,


குட்டிச் சாத்தான்  சொல்லும்  குற்றேவலையும் செய்தான் ,


நோய்  தீர்க்கும்  மருந்து  -



பல  தேசங்கள்  தேடியும்  கிடைக்கவில்லை ,

குறி  சொல்லும் நங்கை  வந்தாள் -


மருந்தின்  பெயரை அன்னையிடம்  கூறினாள் -



"விவாகம்" 

மண மாலை

தென்றலை  வந்தாய்  தோழியாய்..
.
சாரலாய்  இன்பம்  தந்தாய்  சிநேகிதியாய்...


அடை மழையாய் பெய்தாய் என்  தோட்டத்தில் ....


இன்று பூத்துக் குலுங்குகிறது , 


மண மாலையில் பூக்கள் - 


மணமேடையில்  நான் -


மங்கையின்  கரம்  பிடிக்கும் மணாளனாய்... :)



பிரிவு

"நீயாவது  உன்  காதலியை  முதுமிட்டுப்போ  - 
என்  பிரிவு  உனக்கு  வேண்டாம்  "-
காதலன்  - மழையிடம்...!

முதல் மயக்கம்

அன்றொருநாள்  உன்னை  பார்த்த  நொடியில்  சிதறினேன்
இன்று உன்னை  பிரதிபலிக்கிறேன்  பலமுறை  - 
கண்ணாடிச் சிற்களாய் ......! 


கண்ணாமூச்சி....!

அலுவலகத்தில் நான்....
எழ மறுக்கும் குழந்தையாய் சிணுங்கியது - என் கை பேசி,
அன்பு மனைவி ஆனந்தமாய் கூறினாள்,
"நம் வீட்டிற்கு ஒருவர் வரபோகிறார்
மாலை மருத்துவரிடம் செல்ல விரைவாய் வரவும்" என்று,
பல வருடங்களுக்குப்பின் வந்த நற்செய்தி,
ஆனந்தத்தில் சிரிக்கும் மழலையாய் வந்தது கண்ணீர்..!

மாலையில் மருத்துவர் -
"இது குழந்தை அன்று...!"
பிறக்கும் முன்பே விளையாடுகிறான் -
எங்கள் மாயக்கண்ணன் -
"கண்ணாமூச்சி....!"