Friday, May 24, 2013

வேள்வி

பதில் சொல்லத் தெரியாமல்
தவிக்கிறேன் நான்!

தேவதை கேட்கிறாள்
எப்பொழுது கல்யாண வேள்வி?

எப்படி சொல்வேன் -
கடவுள் கேட்பதில்லை
திருவிழா என்றென!!

Sunday, May 19, 2013

ஏக்கம்

பேச நினைக்கும் நேரத்தில்,
கைக்கெட்டா தூரத்தில் நீ..!
உன்னை நினைக்கும் நேரத்தில் -
என் அருகில் நீ..!

கனவுகளில் தான்
வருவாய் என்றால் -
எனது உயிரையும்
செலவு செய்வேன்..!