மண் வளம் போற்றிட - பூந்தொட்டி,
கடல் வளம் பெருக - சங்கு சக்கரம்,
ஊர்வன பறப்பன - குருவி வெடி பாம்பு மாத்திரை,
அறிவியல் வளர்ச்சிக்கு - ரயில் பெட்டி,
வின்வெளி ஆராய்ச்சிக்கு - ஏவுகணை,
நாட்டுப்பற்று விதைத்திட - நேதாஜி வெடி,
இறை நம்பிக்கை உள்ளோர்க்கு - லக்ஷ்மி வெடி,
என நம் முன்னோர்கள் -
மனிதகுலத்திற்கு தேவையான
அனைத்தையும் போற்றினார்கள்...!
நாமோ இயற்கையை அழித்து,
விலங்குகளின் இருப்பிடத்தை ஆக்கிரமித்து,
காற்றை மாசுபடுத்தி,
மொழி மதம் நாடு எல்லாம் மறந்து,
நமக்கு நாமே விரோதி ஆகின்றோம்...!
சற்றே யோசிப்போமாக..!
தீப ஒளி திருநாளில் -
நம் உள்ளம் ஒளி பெறட்டும்....!