Monday, October 21, 2013

அழைப்பிதழ்

கண்டதும் காதல் - அல்ல
எங்களது காதல்!

காத்திருப்பது அழகு
காதலிற்கு மட்டும் அல்ல -
காதலர்க்கும் தான்!!

காத்திருந்த காலம் பேசும் -
எங்கள்  காதல் கதை!!

அக்னியின் முன்
மங்கையின் கரம் பற்றி 
மணாளன் சத்தியம் உறைக்க
நல்ல நேரம் வந்தது!

வந்து வாழ்த்த அன்புடன் அழைக்கிறோம்!

Tuesday, September 10, 2013

மலரும் நானும்

பிறந்த நேரம் -
உன்னுடனில்லை!
பூத்த தருணம் -
அறிந்திருக்கவில்லை!

மணம் கொண்ட
மலரே - என்னைக் கட்டி
இழுத்தாய்!

வந்தவன் உண்ண -
தேன் கொண்டு
தந்தாய்!

தேன் உண்ட
போதை - நான்
மயங்கி நின்றேன்!

தேன் அல்ல போதை -
தந்தவள் நீ தான் போதை!!

தெளிந்ததும் அறிந்தேன் -
வாழ்வின் அமிழ்தம்
நீ தான் என்று!

மலர் விட்டு மலர்
நான் தாவ மாட்டேன்!!
உயிர் கொண்ட பூவே
உன்னை நீங்க மாட்டேன்!!

மடல் மடக்கி என்னை -
உன்னோடு சேர்த்து,
உடல் கொண்ட வினையை
பூரணம் செய்து -
உயிர் மோட்சம் தருவாய்!!

Friday, July 12, 2013

விழிச்சிறை

காதலி கண்ணில்
கரு மை கரைக்க -
காதலன் கட்டுண்டு 
கிடக்கிறேன் கண்ணியின் 
கருவிழியில்!!


  

Tuesday, July 2, 2013

தனிமை

உன்னை உன்னகே
அறிமுகம் செய்யும்
உடன்பிறப்பு!!

கருவறை முதல்
கல்லறை வரை
பயணத்தோழன்!!

எவன் விட்டுச்
சென்றாலும் இவன்
பிரியாதிருப்பவன்!! 

அவள் இல்லாத
காரணமோ எனக்கு
இந்தக் கொடுமை - தனிமை!!!

Friday, May 24, 2013

வேள்வி

பதில் சொல்லத் தெரியாமல்
தவிக்கிறேன் நான்!

தேவதை கேட்கிறாள்
எப்பொழுது கல்யாண வேள்வி?

எப்படி சொல்வேன் -
கடவுள் கேட்பதில்லை
திருவிழா என்றென!!

Sunday, May 19, 2013

ஏக்கம்

பேச நினைக்கும் நேரத்தில்,
கைக்கெட்டா தூரத்தில் நீ..!
உன்னை நினைக்கும் நேரத்தில் -
என் அருகில் நீ..!

கனவுகளில் தான்
வருவாய் என்றால் -
எனது உயிரையும்
செலவு செய்வேன்..!

Sunday, April 14, 2013

சித்திரைக்கனி

நாள்தோறும் எனக்கு
வருடப் பிறப்பே..!!
நித்தம் எந்தன்  
கனியை  - கண்
விழித்ததும் காண்பதால்!!!

Saturday, April 13, 2013

கல்யாணம்

எல்லா உடன் பிறப்புகளும்
சேர்ந்து இருப்பது இல்லை!

தனிமைப் படுவதும் உண்டு,
பிரிவும் உண்டு - சிலர்
எதிரிகள் கூட ஆவர்!!

காதலும் கல்யாணமும் போல்!!! 

ஊடல்

ஊடலும் காதலின் ஓர் அங்கமே,
ஊடலின் பின் வருமாம் கூடல் -
கவலை வேண்டாம் என் தங்கமே!!!

Monday, April 8, 2013

ஜுரம்

என் பார்வை தீண்ட -
உனக்கு ஜுரம் கண்டது!!

என்ன நான் செய்வேன் -
பார்த்தால் பசி தீருமா..?!

Thursday, March 28, 2013

ஐந்தாண்டு அனுபவம்


அடிகளில் அடிகிட ஆணை!
இனிய நினைவுகளே துணை,

ஈக்களாய் திரிந்த வனத்தில்,
உன்னை கண்டேன் தேனாக!

ஊர் தாண்டி சென்றாலும்
என்றும் வருவேன்  விரைந்தோடி!

ஏக்கமே நம்மை இணைத்து
ஐந்தாண்டுகள் கூட்டிச் செல்கிறது!

ஒவ்வொரு நாளும் செய்தோம்     
ஓயாமல் காதலும் சண்டையும்!

ஒளடதமே நம் திருமணம்  
தே நமது வரம்!

Friday, March 1, 2013

கற்பனை

நிகழ இயலா காட்சி
தேவதை கதைகளில் அழகு -
அழகு இல்லை தேவதை
உனது சொல்லிற்கு..! 

Monday, February 18, 2013

கோரிக்கை

தவம் செய்ய காலமில்லை -
   உன்னைப் பிரிய நேர்வதால்,

காகிதத்தில் எழுதி அனுப்பினேன் -
   ஆண்டவனிடம் ஒரு கோரிக்கை,

பின் வரும் பிறவியில் -
   தஞ்சையில் பிறக்க வேண்டி,

தலையாட்டி பொம்மையாய் நான் -
   நீ சொல்வதை கேட்க!!!!

Thursday, February 14, 2013

தவளை

இரட்டை  வாழ்கை வாழ்வதால் -
நானும் தவளை தான்!!

கண்ணீர்

மொழிகள் வெளிபடுத்தாத உணர்வை -
மனிதன் புரிந்து கொள்ள -
இறைவன் படைத்த ஒருவன் -
கண்ணீர்!!

வெறுமை

பல இன்னல்களைக்  கடந்து,
வேண்டிய அளவு வாடி,
இயன்ற வரை முயன்றும்,
நினைத்தது நிகழவில்லை - விளைவு 
"வெறுமை"

ஏக்கம்

உன்னோடு பேசினால்தான் என்
கவிதைக்கு உயிர் பிறக்கிறது!!!
அதற்காக பேசுவதோடு நிற்கிறாயே,
பாவம் என்னுயிர் வாடுகிறது!!!