Tuesday, September 10, 2013

மலரும் நானும்

பிறந்த நேரம் -
உன்னுடனில்லை!
பூத்த தருணம் -
அறிந்திருக்கவில்லை!

மணம் கொண்ட
மலரே - என்னைக் கட்டி
இழுத்தாய்!

வந்தவன் உண்ண -
தேன் கொண்டு
தந்தாய்!

தேன் உண்ட
போதை - நான்
மயங்கி நின்றேன்!

தேன் அல்ல போதை -
தந்தவள் நீ தான் போதை!!

தெளிந்ததும் அறிந்தேன் -
வாழ்வின் அமிழ்தம்
நீ தான் என்று!

மலர் விட்டு மலர்
நான் தாவ மாட்டேன்!!
உயிர் கொண்ட பூவே
உன்னை நீங்க மாட்டேன்!!

மடல் மடக்கி என்னை -
உன்னோடு சேர்த்து,
உடல் கொண்ட வினையை
பூரணம் செய்து -
உயிர் மோட்சம் தருவாய்!!