Tuesday, October 25, 2011

ஊடல்

மின்னல்  வெளிச்சமாய்  கோரைப்பற்கள்,

இடி முழக்கமாய்  கண்களின்  தாக்குதல்,


சாரலாய் வரும் - முடிவு  பெறாத  வார்த்தைகள்,

பேய்  மழையாய்  நோகடிக்கும்  - முற்றுபெற்ற  சொற்கள்,

வெள்ளமாய்  பெறுகும்  கண்ணீர்  துளிகள்,


இவை  அனைத்தும்  தேவைதானா ??!


தனிமை  என்றுமே  இனிமை  தானா...!!


அறவே  இல்லை....!!!


அடை மழைக்கு  பின்  துளிர்த்தெழும்  -


செழிப்பான தளிர்  தான்  - ஊடலின் பின் வரும் காதல் :)



No comments:

Post a Comment