Tuesday, October 25, 2011

கண்ணாமூச்சி....!

அலுவலகத்தில் நான்....
எழ மறுக்கும் குழந்தையாய் சிணுங்கியது - என் கை பேசி,
அன்பு மனைவி ஆனந்தமாய் கூறினாள்,
"நம் வீட்டிற்கு ஒருவர் வரபோகிறார்
மாலை மருத்துவரிடம் செல்ல விரைவாய் வரவும்" என்று,
பல வருடங்களுக்குப்பின் வந்த நற்செய்தி,
ஆனந்தத்தில் சிரிக்கும் மழலையாய் வந்தது கண்ணீர்..!

மாலையில் மருத்துவர் -
"இது குழந்தை அன்று...!"
பிறக்கும் முன்பே விளையாடுகிறான் -
எங்கள் மாயக்கண்ணன் -
"கண்ணாமூச்சி....!"   

No comments:

Post a Comment