Tuesday, October 25, 2011

விவாகம்

சினம்  கொள்ளும்  வேங்கை  - பூனையாய் மாறியது ,

யார்  சொல்லியும்  கேளாதவன்  - மெல்லிய  பூவின்  ரசிகன்  ஆனான் ,


புலால் உண்பவன்  - புல்லினங்களின் கூடலைக் கற்றுக்கொண்டான் ,


குட்டிச் சாத்தான்  சொல்லும்  குற்றேவலையும் செய்தான் ,


நோய்  தீர்க்கும்  மருந்து  -



பல  தேசங்கள்  தேடியும்  கிடைக்கவில்லை ,

குறி  சொல்லும் நங்கை  வந்தாள் -


மருந்தின்  பெயரை அன்னையிடம்  கூறினாள் -



"விவாகம்" 

No comments:

Post a Comment