Sunday, July 15, 2012

காதல் கனவு

கண்   உறங்கும்  வேளையிலே  காதலியே நீ  தானே,
பின் இரவின் பாதியிலே பஞ்சணையில்  நீ  தானே,
இன்பம் தரும் கனவுகளின் நாயகியும்  நீ  தானே,
கண் விழித்துப் பார்கையிலே கரைவதும் நீ  தானே..!!


Monday, June 4, 2012

பாலைத் திணை

காயும் சூரியன் - கடுங்குளிர்,
சுட்டெரிக்கும் மணல் - உறைபனி,
பூக்கும் கற்றாழை - உறங்கும் நத்தை,
கரையும் பேடை - கூகைக் காற்று,
அங்கே நீ - எங்கோ நான்,
நம் பிரிவால் -
இயற்கைக்கும்  சோகம்..!

தூரத்தில் மேகம் -
விரைந்தோடி வாரும்,
என்னவளைக் கண்டு -
என் தூது சேரும்..!
காற்றை வருவேன் -
காதலை தருவேன்,
உன்னைச் சேரும் நாளை 
உரக்கச் சொல்வேன்...!  

Sunday, April 22, 2012

மரணம்

நான்கே நாட்களில் - நீ
முற்றிலும் மறந்தாய் - என்
ஏட்டில் எழுதியது - இதோ
சரியாக நடந்தது - இங்கு
நொடியில் மரணம்...!

Saturday, April 14, 2012

மரியாதை

என்னைச் சுட்டி
"அவர் - என்னவர்"
என சொல்வதைக் கேட்பவர்க்குத்
தெரியாது - என் சுட்டிப்பெண்
நீ - எனக்கு தரும் மரியாதை...!

Sunday, April 8, 2012

தண்டனை

குற்றம் புரிந்தவனுக்கு
விசாரித்த பின் - தண்டனை...!
உன்னை விட்டுச் சென்ற
எனக்கு - வேண்டாம் விசாரணை -
உன் மௌனமே தண்டனை....!

Saturday, March 24, 2012

பார்வை

மையல் தரும் உனது
சுட்டும் விழிப் பார்வையை 
ருசிக்க -
கோதையே - எப்போதும் வரும்
வைகறை என காத்திருக்கிறேன்....!

Saturday, March 17, 2012

ஆனந்த அவஸ்தை..!

சொல்வதைக் கேட்பவன் நான்,
அதற்காக - நான்
நினைத்ததையும் நீயே சொல்கிறேன்
என சண்டை இடும் - நீ...!