கப்பலில் வாடி,
கடலில் தேடினேன்,
காதல் கன்னியை..!
திக்கு தெரியாமல்,
பித்தென ஆனேன்,
அவளைக் காணாமல்..!
தூரத்தில் விடிவெள்ளி,
மின்னியது அவளொளி,
பின்தொடர்ந்தேன் அவளை..!
கரையைச் சேர
வழியில்லை- சிறையில்
எந்தன் தேவதை..!
மாயனவன் பிடியினை
நீக்க மன்னன் -
நான் வருகிறேன்..!
சிறை மீட்கும்
நேரம்வரை - காத்திரு
சின்ன பெண்ணே..!