Enthan Kavithai
Sunday, October 21, 2012
தவம்
நீ இன்றி இரவெல்லாம் கண்விழித்தேன்,
விடியலாய் நீ வருவாய் என,
விடிந்தும் ஏன் நீ வரவில்லை,
விழியின் தவம் போதவில்லை என்றோ!!??
தவிப்பு
தகிக்கிறது உள்ளம் - உன்னை
நீங்கி விலகி நிற்பதால்,
தலைகோத வருவாயா - இல்லை
தலை சாய்ந்ததும் வருவாயா..!!?
Friday, October 5, 2012
பசலை
என்
கோப(வை) கிளியே,
உந்தன் உடல் உருக -
காரணம் மேகம் இல்லை!!
காதலன் தனை பிரியும்,
தலைவிக்கு வரும் இது-
கொடிய நோய் பசலையாம்
!!!
Monday, October 1, 2012
வரம்
வருடம் ஒரு முறை பூஜை,
வாரம் ஒரு முறை விரதம் - இருந்தாய்
வரனாய் நான் வர வேண்டி..!
தமிழில் எண்கள் இல்லை- நான்
தவம் செய்த காலம் உரைக்க -
வரமாய் தேவதை - நீ வர வேண்டி..!
Monday, September 3, 2012
தேவதை
தேவதையே ...!
நீ யார் என்று -
இயற்கை கூட அறியும்...!
பன்னீர் தெளிக்கும் வானம்,
குடை பிடிக்கும் மேகம்,
வரவேற்புத் தோரணம் வானவில்..!
பாதம் முத்தமிடும் ரோஜா,
பார்த்து கவிழும் தாமரை,
கன்னம் கடிக்கிறது தேனீ...!!
Sunday, August 19, 2012
ஏமாற்றம்
அவனியை அல்லல்படுத்தி ஆழ்பவன் -
இல்லத்தின் இன்பத்தைப் பருகுபவன் -
உறவுகளைக் கெடுக்கும் உத்தமன் -
எதிர்பார்ப்பின் செல்லக் குழந்தை -
ஏமாற்றம்..!!
Saturday, August 18, 2012
கண்ணாமூச்சி
கண் முன்னே வந்து,
கைத் தொடும் தூரத்தில் நின்று,
கன நொடியில் மறைந்து,
ஆடுகிறாய் - கண்ணாமூச்சி..!!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)