Enthan Kavithai
Sunday, October 21, 2012
தவிப்பு
தகிக்கிறது உள்ளம் - உன்னை
நீங்கி விலகி நிற்பதால்,
தலைகோத வருவாயா - இல்லை
தலை சாய்ந்ததும் வருவாயா..!!?
Friday, October 5, 2012
பசலை
என்
கோப(வை) கிளியே,
உந்தன் உடல் உருக -
காரணம் மேகம் இல்லை!!
காதலன் தனை பிரியும்,
தலைவிக்கு வரும் இது-
கொடிய நோய் பசலையாம்
!!!
Monday, October 1, 2012
வரம்
வருடம் ஒரு முறை பூஜை,
வாரம் ஒரு முறை விரதம் - இருந்தாய்
வரனாய் நான் வர வேண்டி..!
தமிழில் எண்கள் இல்லை- நான்
தவம் செய்த காலம் உரைக்க -
வரமாய் தேவதை - நீ வர வேண்டி..!
Monday, September 3, 2012
தேவதை
தேவதையே ...!
நீ யார் என்று -
இயற்கை கூட அறியும்...!
பன்னீர் தெளிக்கும் வானம்,
குடை பிடிக்கும் மேகம்,
வரவேற்புத் தோரணம் வானவில்..!
பாதம் முத்தமிடும் ரோஜா,
பார்த்து கவிழும் தாமரை,
கன்னம் கடிக்கிறது தேனீ...!!
Sunday, August 19, 2012
ஏமாற்றம்
அவனியை அல்லல்படுத்தி ஆழ்பவன் -
இல்லத்தின் இன்பத்தைப் பருகுபவன் -
உறவுகளைக் கெடுக்கும் உத்தமன் -
எதிர்பார்ப்பின் செல்லக் குழந்தை -
ஏமாற்றம்..!!
Saturday, August 18, 2012
கண்ணாமூச்சி
கண் முன்னே வந்து,
கைத் தொடும் தூரத்தில் நின்று,
கன நொடியில் மறைந்து,
ஆடுகிறாய் - கண்ணாமூச்சி..!!!
Sunday, July 15, 2012
காதல் கனவு
கண் உறங்கும் வேளையிலே காதலியே நீ தானே,
பின் இரவின் பாதியிலே பஞ்சணையில் நீ தானே,
இன்பம் தரும் கனவுகளின் நாயகியும் நீ தானே,
கண் விழித்துப் பார்கையிலே கரைவதும் நீ தானே..!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)