Friday, October 5, 2012

பசலை

என்  கோப(வை) கிளியே,
உந்தன் உடல் உருக -
காரணம் மேகம் இல்லை!!

காதலன் தனை பிரியும்,

தலைவிக்கு வரும் இது-
கொடிய நோய் பசலையாம்
!!!

Monday, October 1, 2012

வரம்

வருடம் ஒரு முறை பூஜை,
வாரம் ஒரு முறை விரதம் - இருந்தாய்
வரனாய் நான் வர வேண்டி..!

தமிழில் எண்கள் இல்லை- நான்
தவம் செய்த காலம் உரைக்க - 
வரமாய் தேவதை - நீ வர வேண்டி..! 

Monday, September 3, 2012

தேவதை

தேவதையே ...!
நீ யார் என்று -
இயற்கை கூட அறியும்...!

பன்னீர் தெளிக்கும் வானம்,
குடை பிடிக்கும் மேகம்,
வரவேற்புத்   தோரணம் வானவில்..!

பாதம் முத்தமிடும் ரோஜா,
பார்த்து  கவிழும் தாமரை,
கன்னம் கடிக்கிறது தேனீ...!!

Sunday, August 19, 2012

ஏமாற்றம்

அவனியை அல்லல்படுத்தி ஆழ்பவன் -
இல்லத்தின் இன்பத்தைப் பருகுபவன் -
உறவுகளைக் கெடுக்கும் உத்தமன் -
எதிர்பார்ப்பின் செல்லக் குழந்தை -
ஏமாற்றம்..!!

Saturday, August 18, 2012

கண்ணாமூச்சி

கண் முன்னே வந்து,
கைத் தொடும் தூரத்தில் நின்று,
கன நொடியில் மறைந்து,
ஆடுகிறாய் - கண்ணாமூச்சி..!!!

Sunday, July 15, 2012

காதல் கனவு

கண்   உறங்கும்  வேளையிலே  காதலியே நீ  தானே,
பின் இரவின் பாதியிலே பஞ்சணையில்  நீ  தானே,
இன்பம் தரும் கனவுகளின் நாயகியும்  நீ  தானே,
கண் விழித்துப் பார்கையிலே கரைவதும் நீ  தானே..!!


Monday, June 4, 2012

பாலைத் திணை

காயும் சூரியன் - கடுங்குளிர்,
சுட்டெரிக்கும் மணல் - உறைபனி,
பூக்கும் கற்றாழை - உறங்கும் நத்தை,
கரையும் பேடை - கூகைக் காற்று,
அங்கே நீ - எங்கோ நான்,
நம் பிரிவால் -
இயற்கைக்கும்  சோகம்..!

தூரத்தில் மேகம் -
விரைந்தோடி வாரும்,
என்னவளைக் கண்டு -
என் தூது சேரும்..!
காற்றை வருவேன் -
காதலை தருவேன்,
உன்னைச் சேரும் நாளை 
உரக்கச் சொல்வேன்...!