Thursday, March 28, 2013

ஐந்தாண்டு அனுபவம்


அடிகளில் அடிகிட ஆணை!
இனிய நினைவுகளே துணை,

ஈக்களாய் திரிந்த வனத்தில்,
உன்னை கண்டேன் தேனாக!

ஊர் தாண்டி சென்றாலும்
என்றும் வருவேன்  விரைந்தோடி!

ஏக்கமே நம்மை இணைத்து
ஐந்தாண்டுகள் கூட்டிச் செல்கிறது!

ஒவ்வொரு நாளும் செய்தோம்     
ஓயாமல் காதலும் சண்டையும்!

ஒளடதமே நம் திருமணம்  
தே நமது வரம்!

Friday, March 1, 2013

கற்பனை

நிகழ இயலா காட்சி
தேவதை கதைகளில் அழகு -
அழகு இல்லை தேவதை
உனது சொல்லிற்கு..! 

Monday, February 18, 2013

கோரிக்கை

தவம் செய்ய காலமில்லை -
   உன்னைப் பிரிய நேர்வதால்,

காகிதத்தில் எழுதி அனுப்பினேன் -
   ஆண்டவனிடம் ஒரு கோரிக்கை,

பின் வரும் பிறவியில் -
   தஞ்சையில் பிறக்க வேண்டி,

தலையாட்டி பொம்மையாய் நான் -
   நீ சொல்வதை கேட்க!!!!

Thursday, February 14, 2013

தவளை

இரட்டை  வாழ்கை வாழ்வதால் -
நானும் தவளை தான்!!

கண்ணீர்

மொழிகள் வெளிபடுத்தாத உணர்வை -
மனிதன் புரிந்து கொள்ள -
இறைவன் படைத்த ஒருவன் -
கண்ணீர்!!

வெறுமை

பல இன்னல்களைக்  கடந்து,
வேண்டிய அளவு வாடி,
இயன்ற வரை முயன்றும்,
நினைத்தது நிகழவில்லை - விளைவு 
"வெறுமை"

ஏக்கம்

உன்னோடு பேசினால்தான் என்
கவிதைக்கு உயிர் பிறக்கிறது!!!
அதற்காக பேசுவதோடு நிற்கிறாயே,
பாவம் என்னுயிர் வாடுகிறது!!!