Sunday, September 10, 2017

இதுவும் கடந்து போகும்


தைரியம் கொண்ட பெண்தான்
நீ - அனைத்தையும் தாங்கிக்கொள்கிறாய்
எனக்காக!

என்னால் தான் - பல
இன்னல்களை பார்க்கிறாய் கண்ணே
நீ!

உன்னை தனிமையில் விட்டு
நான் மகிழிக்கிறேன் என்று
எண்ணுகிறாயோ?

ஒவ்வொரு முறையும் முள்ளில்
நடக்கிறேன் உன்னை விட்டுச்
செல்கையில்.

நம் காதல் கனி
வரும் வேளை - இதுவும்
கடந்து போக வேண்டுகிறேன் 
தினமும்.

No comments:

Post a Comment